Wednesday, January 7, 2009

கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற சம்பவம்தான் இதுவும்.பொதுவா கல்லூரியில் நான் ரொம்ப நல்லா பையன் அப்டின்னு பேர் உண்டு.எல்லாம் ஒரு படம்தான்..நம்மளோட அட்டகாசம் எல்லாம் கல்லூரிக்கு வெளியேதான்.என் நெருங்கிய நண்பன் ஒருத்தன் இருந்தான்.அவனுக்கு என்னை யாரவது நல்லா பையன்னு சொல்லிட்டா போதும்,ஏன்டா உன்னை நல்லவன்னு இன்னுமா இந்த உலகம் நம்புதுனு கேட்பான்.ஏனென்றால் நம்ம ரகசியம் எல்லாம் அவனுக்குதானே தெரியும்.இந்த சூழ்நிலையில ஒருநாள் ஜூனியர்ஸ் எல்லாம் அப்பத்தான் வந்து இருந்தாங்க.நான் நூலகத்துக்கு போய்ட்டு வந்துடு இருந்தேன்.அப்ப படியில ஒரு பொண்ணு இறங்கி போனாங்க,அவங்கள பார்த்தா என்கூட 10வது படிச்ச பொண்ணு மாதிரியே இருந்தது.உடனே வேகமா ஓடி போய் பாத்தேன்.அதுக்குள்ள அவங்க படில இருந்து இறங்கி போயிட்டு இருந்தாங்க.படி வந்து "L" வடிவத்துல இருக்கும்.4அடி ஆழம் அப்புறம் அங்க ஒரு வளைவு,மறுபடியும் 4அடி ஆழம்.நான் இந்த இரண்டு இடத்துலயும் ஒரு ஜம்ப் பண்ணிட்டேன்.என்ன ஒரு கொடுமைனா நான் LAND ஆன இடம் இயற்பியல் துறையின் ஓய்விடம்.அங்க ஒரு மேடம் இருந்தாங்க.நான் சரியாக குதிச்சபோது அவங்க அறைய விட்டு வெளியே வந்தாங்க.ஒரு நிமிடம் அதிர்ந்து போய் பார்த்துட்டு என்ன ஆச்சுனாங்க,நான் ஹிஹி ஒன்னும் இல்லை மேடம்னு சொன்னேன்.ஆனா என் கெட்ட நேரம் உச்சத்துல நின்னு இருக்கறது எனக்கு தெரியாம போச்சு.நான் அந்த பொண்ணை பார்த்துட்டு குதிச்சத அந்த மேடம் பார்த்துடாங்க.நல்லவன்னு நெனச்சேன் நீயுமானு கேட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட ஆரம்பிச்சுடாங்க.இதுல என்ன கொடுமைனா நான் தேடி போன பொண்ணு என் தோழியே இல்லை..அதுல இருந்து அந்த மேடம் என்ன பார்த்தாங்கனா போதும் அரவிந்தன் குதிக்க இடம் தேடுரிங்கலானு கேட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்ட ஆரம்பிச்சுருவாங்க.

Tuesday, January 6, 2009

பள்ளி நட்பு

இப்ப நான் இடும் இந்த பதிவு என் பள்ளி நாட்களில் நடந்தது.அப்பொழுது அதன் அர்த்தம் புரியவில்லை.இன்று அதை நினைத்து பார்க்கும் பொழுது எவ்வளவு பசுமையான நாட்கள் என்றும்,அந்த பள்ளி நட்பும் கண்களில் சிறிது நீரை உருவாக்குகிறது.அப்ப நான் 6ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.இப்ப வரைக்கும் அதை முடிச்சுடியானு நீங்க கேட்பது எனக்கும் கேட்குது.இருந்தாலும் படிங்க இத.நான் படிச்சது கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி(இப்ப அது மேல்நிலை பள்ளி).அதுனால பாதி நேரம் மைதானத்திலும்,பாதி நேரம் வகுப்பறையிலும் இருப்போம்.பள்ளிக்கு பக்கத்திலேயே நண்பணின் தோட்டம்.அங்கு நெல்லிக்காய் மரம் இருந்தது.வகுப்பு இல்லைனா நாங்க எல்லாம் அங்க போய்ருவோம்.நண்பனின் அப்பா ரொம்ப நல்லவர்.பிள்ளைங்க சாப்பிட்டது போக மிச்சம் இருப்பதுதான் விற்பனைக்குனு சொல்லிருவார்.அதுனால நம்ம ராஜ்ஜியம்தான்.பள்ளியில் அப்பொழுது புதிதாக மரக்கன்றுகள் நட்டு இருந்தார்கள்.வகுப்புகள் இல்லாத நேரத்துல அந்த மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பது தலைமையாசிரியரின் உத்தரவு.நாங்களும் நீர் ஊற்ற கிளம்பினோம்.அப்பதான் விதி என் நண்பணின் வடிவில் எங்களை பார்த்து சிரித்தது.அவன் எங்களை எல்லாம் வாங்கடா போய் இளநீர் குடிச்சுட்டு,நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்னு கூப்பிட்டான்.ஆசிரியரிமேல் பயம் இருந்தாலும் அதை மீறி அவன் தோட்டத்து இளநீர் ருசியும்,நெல்லிக்காயும் எங்களை அவன் தோட்டத்திற்கு அழைத்துச்சென்றது.ஆனா மத்த பசங்க எல்லாம் ரொம்ப நல்லவிங்க.மரக்கன்றுகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தாங்க.நாங்க அந்த வகுப்பு நேரம் முடியறதுக்குள்ள வந்து விடலாம் என்று நினைத்து கிளப்பி விட்டோம்.நாங்கள் என்று சொல்வது எங்கள் நண்பர்கள் குழுவை.நாங்கள் 5 பேர்.எங்க போனாலும் ஒன்றாகத்தான் செல்வோம்.நாங்க சரியான நேரத்துக்கு வந்துட்டோம்.ஆனால் எங்க கெட்ட நேரம் தலைமையாசிரியார் எங்கள் மற்ற நண்பர்களின் வேகத்தை பார்த்துவிட்டு அனைவரையும் வகுப்பறைக்கு செல்லும்படி கூறிவிட்டு பாரட்டுவதற்காக வகுப்பறைக்கு வந்துவிட்டார்.வந்து வருகைப்பதிவேடை பார்க்கையில் நாங்க இல்லைங்கறத கண்டுபிடிச்சுட்டார்.நாங்க வந்ததும் விசாரணை ஆரம்பிச்சுச்சு.தலைமையாசிரியார் ரொம்ப இதமா கேட்டார்.எங்க போய்ட்டு வறீங்க,யாரு கூட்டிட்டு போனதுனு.யாரும் வாயை திறக்கலை.நண்பனை மாட்டி விட முடியுமா?அமைதியா இருந்தோம்.எங்களை கூட்டிட்டு போன நண்பணே சொல்ல வந்தப்பவும் நாங்க சொல்ல விடலை
அவரும் பொறுமையா கேட்டு பார்த்தார்.நாங்க சொல்லலை.பக்கத்துல இருந்த குச்சிய எடுத்தார்.எடுத்தவர் குச்சி சின்ன,சின்ன தூளா போறவரைக்கும் விடலை.அடி பின்ன்னி எடுத்துட்டார்.ஆனாலும் நாங்க சொல்லலை.அவரே கடைசில ஆச்சரியம் தாங்க முடியாம உங்க நண்பனை காட்டி கொடுக்க மாட்டீங்களாக்கும் அப்டினு கேட்டாரு.அதுக்கும் வாயைதிறக்கலை.உங்க ஒற்றுமைய இந்த மாதிரி விசய‌ங்களில் காமிக்காதீங்கடா நல்ல விசயங்களில் காமிங்கனு சொன்னார்.இதுல என்ன விசயம்னா அது வரைக்கும் நான் எந்த ஒரு ஆசிரியரிடமும் அடி வாங்கியது கிடையாது.அதுதான் முதல் முறை.அடி வாங்கியது வலித்தாலும் நண்பனை காட்டிக் கொடுக்கவில்லை என்ற பெருமிதம் இருந்தது.நாங்கள் அனைவரும் இன்று பார்க்கும்பொழுது கூட இந்த நியாபகங்கள்தான் வரும்.என்றும் என் நினைவில் நிற்கும் விசயமிது.

ஒரு தம்ளர் பீர்.

நான் கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இது.கல்லூரியின் ஆண்டுவிழா நடைபெற்று கொண்டிருந்தது.ஆண்டுவிழானா கேட்கனுமா பசங்கள் எல்லாம் ஜாலியா இருந்தாங்க.நானும் என் நண்பனும் கல்லூரியிலிருந்து கல்லூரி விடுதிக்கு சென்று கொண்டிருந்தோம்.நடந்து செல்கையில் விடுதியிலிருந்து நண்பன் ஒருவன் குட்டிகரணம் அடித்துக்கொண்டே எங்கள் எதிரே வந்தான்.நண்பன் அவனை நிறுத்தி என்னடா இப்படி வரனு கேட்டதும் அவன் சொன்னான் மாப்ளே நான் தண்ணி அடிச்சு இருக்கேன்,மப்பு ஏறி போச்சு அப்டி இப்டின்னு உளறிட்டு இருந்தான்.இந்த சமயத்தில் எங்கள் கல்லூரியின் ஆங்கில துறையில் பணிபுரியும் பேராசிரியர் எங்களிடம் வந்து விட்டார்.அவரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் அவர் மாணவர்களிடம் மிகவும் சகஜமா பழகுவார்.(நான் அவரு எல்லாம் சேர்ந்துதான் காதலுக்கு மரியாதை படத்துக்கு போனோம்னா பார்த்துகோங்க.அது பற்றி ஒரு தனி பதிவு இருக்கு. ).அவரும் வந்து அவன கேட்கவும் எங்கள்ட்ட சொன்னதையே அவற்றையும் சொன்னான்.சரி அப்படி என்னடா குடிச்சனு அவர் கேட்டார்.சார் நான் ஒரு கிளாஸ் பீர் குடிச்சேன் சார்னு சொன்னான் பாருங்க.கன்னத்துல்ல விட்டார் ஒரு அறை.அதுக்கு அப்புறம்தான் நடந்துச்சு அதிரடியே.அடிச்சுட்டு சொன்னார் அவரு நாயே ஒரு 1/2 அடிச்சுட்டு நானே பஸ் ஏறி வந்து இருக்கேன்,ஒரு கிளாஸ் பீர் எ குடிச்சுட்டு குட்டிகரணமா அடிக்குற ராஸ்கல் ரூம்ல போய் படுத்து தூங்கு.ஒரு கிளாஸ் பீர் அடிச்சுட்டு தண்ணி அடிகுறவன் மானத்த எல்லாம் வாங்குற.உன்ன ரூம விட்டு வெளியே பாத்தேன் அங்கனயே உன்ன கொன்னுருவேனு சொன்னாரு பாருங்க.எடுத்தான் அவன் ஓட்டம்.இன்னைக்கும் அந்த நண்பன பார்த்த எல்லாரும் அதை சொல்லி தான் கிண்டல் பண்ணுவோம்.
அப்ப நான் 8ஆம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன்.அப்பதான் நீச்சல் கத்துக்கிட்ட புதுசு.கிணத்துல குளிக்கலாம்னு நானும்,என் நண்பர்கள் 5 பேரும் போனோம்.அப்ப எல்லாம் எங்களுக்குள்ல ஒரு விளையாட்டு இருக்கும்.என்னனா தண்ணிக்குள்ளேயே போய் இந்த பக்கத்துல இருந்து அந்த பக்கத்துக்கு போய் கிணற்றோட மறுசுவர தொட்டுடு வரணும்.யாரு அதிக தடவை தொட்டுட்டு வராங்களோ அவங்கதான் வெற்றிபெற்றவங்க.நானும் என் நண்பணும் குதிச்சு தண்ணிக்குள்ளேயே போனோம்.சுவரை தொட்டு தண்ணிக்குள்ளே இருந்து மேலே வந்து பார்க்குறோம்.ஓடையில்(அதாவது கிணற்றின் பக்க சுவர்கள்)ஒரு பாம்பு தலைய தூக்கிக்கிட்டு நிக்கிது .ஒரு நிமிடம் என்ன பண்ணுறதுனே தெரியலை.தண்ணி பாம்பு இல்லைங்க.நல்லபாம்பு(நல்லபாம்புதேனே பேசிட்டு வர வேண்டியதுதானேனு மொக்கைய போடாதீங்க ).அடுத்த நிமிடம் மறுபடியும் தண்ணிக்குள்ள முங்கி இந்த பக்கம் வந்து படில ஏறி ஓடுனோம் பாருங்க வீட்டுக்கு போய்தான் ஓட்டத்த நிறுத்தினோம்.அப்புறம் 1 வாரத்துக்கு யாரும் கிணத்து பக்கம் போகவே இல்லையே.இன்னைக்கும் எந்த கிணற்றை பார்த்தாலும் அந்த நியாபகம்தான் வரும்

வணக்கம் நண்பர்களே.இந்த வலைப்பூவை பார்வையிட வந்த உங்களை வரவேற்கிறேன்.இங்கு நான் என் உணர்வுகளை என் வாழ்வில் நடந்த சம்பவங்கள்,நான் உணர்ந்தவைகள்,நான் ரசித்த விடயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்.அதில் நீங்கள் ரசித்தவைகளையும்,அல்லது ஏதும் குறை இருப்பின் அதையும் என்னிடம் தெரிவிக்கலாம்.உங்கள் உணர்வுகளை எதிர்பார்த்து என்றும் அன்புடனும்,நட்புடனும் அ.எ.அரவிந்தன்.